கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முடிவெடுத்தமயும் அதன் வதிவிடப்பிரதி நிதி நீல் பூனேயை திருப்பி அழைத்தமையும் சிறிலங்காவின் இராஜதந்திர நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய சுந்தந்திர முன்னணியின் தலைவரும் நிரமாணத்துறை மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எதிர்ப்புப் போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று ஐக்கிய நாடுகளுடன் தொடர்பு கொண்ட வெளி நாட்டமைச்சர் பீரிஸ் சில தினங்களுக்குள் தாம் நல்ல முடிவெடுப்பதாகவும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதாகவும் கூறினார் ஆனால் ஐக்கிய நாடுகள் இதனை செவிமடுக்கவில்லை. இதனால் நேற்று நாடு திரும்பிய மஹிந்தவுடன் பீரிஸ் மந்திராலோசனை நடாத்தினாராம்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக