சனிக்கிழமை காலையில் கிட்டத்தட்ட 7.30 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அண்மையில் நடந்துள்ளது. இறந்த பெண்மணி இன்னமும் அடையாளங் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமையன்று சாவகச்சேரியிலுள்ள மந்துவில் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக