கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மினி முகாம் ஒன்றிலே கடமையாற்றி வரும் படைவீரர்களது இராணுவ சீருடைகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .துவைத்து காயப் போடப்பட்ட சீருடைகளே களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் , சந்தேகத்திடமானவர்களின் நடமாட்டங்கள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக