வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இராணுவ சீருடைகளை காணோமாம்?............

கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மினி முகாம் ஒன்றிலே கடமையாற்றி வரும் படைவீரர்களது இராணுவ சீருடைகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .துவைத்து காயப் போடப்பட்ட சீருடைகளே களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் , சந்தேகத்திடமானவர்களின் நடமாட்டங்கள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக