வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

செஞ்சோலைசெல்வங்களின் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு !!!!.....

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட எமது செல்வங்களை நாம் தொலைத்த நாள்

சிங்கள இனவாத அரசின் இன வெறி தாண்டவம் அரங்கேறிய நாள் .உலகமே மௌனமாக இருந்த நாள் ..எமது செல்வங்களின் ஆத்மா சாந்தியினை வேண்டி நாம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம் ..நாம் எமது செல்வங்களை புதைக்கவில்லை மாறாக விதைத்து உள்ளோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக