வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் .நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன்!!!.....


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன் வைத்திருந்தாராம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பி. இந்நேரத்தின் கடனை நிறைவேற்றினால் ஆலயத்தைத் தரிசனம் செய்து வழிபாடு செய்வார் என்று முருகப் பெருமானுக்கு சத்தியம் செய்திருந்தாராம். இந்நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.பரிவாரங்கள் சகிதம் நல்லூர்க் கந்தனைத் தரிசித்தார். விசேட பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸன் பெர் னாண்டோ ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக