புதன், 18 ஆகஸ்ட், 2010

வன்னி பெண்கள் மீதான.............


பல உயிர்களையும் , சொத்துகளையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதரத்திற்க்கு கையேந்தும் பெண்களை இனம்கண்டு கவர்ச்சிகரமான சலுகைகளையும்,     சம்பள கொடுப்பனவுகளின் ஊக்கதொகைகள் தருவதாக கூறியே அண்மையில் கிளிநொச்சியில் பகுதியில் பல இளம் யுவதிகளை தேர்வு செய்து கொண்டது.


" பென்குயின் " எனும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ,தெரிவு செய்யபட்ட யுவதிகளின் புகைப்படங்கள் ,சுயவிபர பதிவுகள் , அனைத்தையும் பெற்று கொண்ட நிறுவனம் குறிப்பிட்ட யுவதிகள் 22 பேர்களை கடந்த மாதம் கண்டி பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் , இதுவரை அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்க பெறாத பெற்றோர் மிகவும் கவலை கொண்டுள்ள நிலையில் மீண்டும் யுவதிகளை கொண்டுசெல்லும் செயலை தடுத்து நிறுத்தியதால் பல யுவதிகள் காப்பாற்றபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக