புதன், 18 ஆகஸ்ட், 2010

மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்.........

ஓட்டிப்போன வயிற்றோடும் -குழி
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக