ஓட்டிப்போன வயிற்றோடும் -குழி
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக