திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஐந்நூறுபோராளிகள் ஒப்படைக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மேலும் ஐந்நூறுபோராளிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம்ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இவ்வைபவம், வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ. குண சேகர மற்றும் பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்சா ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.வவுனியா பம்பைமடுவ புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சிகளை நிறைவுசெய்த 500 பேர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவுள்ளனர். இந்நிகழ்வின்போது சுமார் 180 பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் இவர்களில் பதினேழு தாய்மார்கள், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக