திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு.....

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இராணுவத் தளபதியைப் போலவே விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப்குமார் ஆகியோரும் இலங்கைக்கு வரவுள்ளனர்.கடந்த யூன் மாதம் இந்திய கடற்படைத் தள பதி நிர்மல் வர்மா கொழும்புக்குவந்து திரும்பினார். இதேவேளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கை இராணுவத் தளபதி இந்தியா செல்லவுள்ளார். கருத்தரங்கில் பேசுவதற்காக அவர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக