இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இராணுவத் தளபதியைப் போலவே விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப்குமார் ஆகியோரும் இலங்கைக்கு வரவுள்ளனர்.கடந்த யூன் மாதம் இந்திய கடற்படைத் தள பதி நிர்மல் வர்மா கொழும்புக்குவந்து திரும்பினார். இதேவேளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கை இராணுவத் தளபதி இந்தியா செல்லவுள்ளார். கருத்தரங்கில் பேசுவதற்காக அவர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக