திங்கள், 30 ஆகஸ்ட், 2010

விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில்.....

தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனகஜயசேகர பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,


தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்வ தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் குமரன் பத்மநாதன் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன், ராஜன் மற்றும் எம்.வீ.கிறிஸ்டியானா கப்பல் ஆகியவற்றை கைது செய்தமை இலங்கை பாதுகாப்புத் தரப்பு எய்திய மிகப்பெரிய வெற்றிகளாக கருதப்படவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மொத்த சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் நிலைமை காணப் படுவதாகவும் அனேகமான சொத்துக்கள் மறைக்கப்பட்டு அல்லது வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் ரெஜியிடம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக