வெள்ளி, 31 டிசம்பர், 2010

குடத்தனைச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்!? மணற் விற்பனையை அம்பலப்படுத்தினாராம்!!

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) என்பவரேயாவார்.
தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக