தற்போது தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்துக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள புதிய கட்சிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம், ஜனவரி மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதம் புதிய கட்சிகளை பதிவு செய்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இதன் போது 85க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் விண்ணங்களை வழங்கி இருந்ததாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விண்ணப்ப காலம் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் அவற்றை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், விண்ணப்பித்துள் கட்சிகளில் சில கட்சிகள் மாத்திரமே அரசியல் கட்சிகளாக ஏற்றுக் கொள்வது தொடர்பில் பரிசீலிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக