வியாழன், 30 டிசம்பர், 2010

தம்பி பசிலின் வேண்டுதலை அண்ணா மஹிந்த புறக்கணித்தார்.

வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்‌ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார்.பசில் இராஜபக்‌ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்‌ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே  டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார்.
ஆனால் பசிலிற்கு ஜயசுந்தர இடைஞ்சலாக உள்ளார் என கூறப்படுகின்றது. எனவே தான் பசில் இராஜபக்‌ஷ தனக்கு தனியான ஓர் செயலரை தருமாறும் அதுவும் தான் சிபார்சு செய்யும் சாஜ் மெண்டிஸ் என்பவரை நியமிக்குமாறும். மஹிந்தவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் பசிலின் களவு அறிந்த மஹிந்த இந்த நியமனத்தை இன்னமும் வழங்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பசில் இதுவரை அமைச்சு அலுவலகம் போகவில்லை, அத்துடன்  அமைச்சு செயலகத்தை வேறு இடத்திற்கும் மாற்றபோகின்றாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக