வியாழன், 30 டிசம்பர், 2010

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர் (படம்)

அமெரிக்காவில்  பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்  ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ர இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை  சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக