நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது. எந்த மாற்றங்களும் இல்லை. எந்த முன்னேற்றங்களும் இல்லை. மூடப்பட்ட ஊர்கள் அப்படியே இருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கட் கூட்டத்தின் தொடரும் சாபம், இரத்தமும் சதையுமாய் எங்கள் காலத்திலும் பரவிச் செல்கிறது தமிழர்களுக்கு மட்டும் ஏன் துப்பாக்கிகளின்; அச்சுறுத்தல்கள் எப்பொழுதும் பரிசளிக்கப்படுகின்றன. உரிமைக்காக இலட்சியத்திற்காக துப்பாக்கி ஏந்திய மக்களை, தங்கள் துப்பாக்கிகளும் காக்கி உடைதரித்த துப்பாக்கிகளும் அச்சுறுத்துகின்றன.
தமிழர்கள் எதையும் கேட்க முடியாத அச்சமான சூழலுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று இந்தத் துர்ப்பாக்கியமான துப்பாக்கிதாரிகளும் நினைக்கிறார்கள் வாழ்வுக்காக போராடும் தமிழ் பேசும் மக்களினின்வாழ்வுரிமைகள் சிறக்க வேண்டும். ஒன்றாய் பலம் சேரக்க வேண்டும். இன்றும் சிலர் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறது தாய்நிலம். கொல்லப்பட்டவர்களில் யாரினதோ சடலம் கொண்டு செல்லப்படும் பொழுது வெடியோசைகள் கனத்துக் கேட்கின்றன. இந்த வெடியோசைகள் புதுவருடத்திற்காகவா?
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக