அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் இரகசிய அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு, பல அரசுகளை சங்கடத்தில் ஆழ்த்திய ஜூலியன் அசாங்காவிற்கு
எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் செய்த சதித்திட்டமே சுவீடன் பெண்கள் அளித்த புகார் என்று கூறப்படுகிறது.
தனக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வலியுறுத்தலில் பேரில் பன்னாட்டு காவல் படை விடுத்த கைது உத்தரவையடுத்து கடந்த வாரம் லண்டன் காவல் துறையினரிடம் ஜூலியன் அசாங்கா சரண் அடைந்தார்.
கடந்த ஒரு வார காலமாக நீதிமன்ற காவலில் இருந்த அசாங்காவை பிணையில் விடுவிக்கக் கோரி பல மனித உரிமை அமைப்புகள் போராடின. அவைகள் திரட்டியளித்த 2 இலட்சம் பவுண்ட் ரொக்கத்தின் பேரில் வெஸ்ட்மின்டர் நீதிமன்றம் அசாங்காவை இன்று பிணையில் விடுவித்துள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக