யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர்.
எனினும், தேசிய அனர்த்த தின நிகழ்வினை ஒருங்கிணைக்கவென, அரச உயர்மட்டத்தால் அனுப்பப்பட்ட சிங்கள அதிகாரியொருவர், தனிச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாட உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. அரச உயர் மட்ட பணிப்பு இதுவெனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே படை அதிகாரிகளது நேரடி வழிநடத்தலில், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவ மாணவிகளுக்கு அவசர அவசரமாக இரவு, பகலாக தேசிய கீதத்தைப் பாட, பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பௌத்த மதகுருவொருவர் சிங்கள மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரோ தனது மாணவர்களுக்கு சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பயிற்றுவிக்க
மறுத்துவிட்டார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக