யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி , சங்கானை, சித்தன்கேணி , தொட்டிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட இடங்களில் இராணுவத்தினரால் வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் சிறிய ரக வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு வாகன சாரதியின் அடையாள அட்டை இலக்கம், வாகனத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவு நடவடிக்கைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் மேற்கொள்வதாக வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவிக்கின்றார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக