புதன், 29 டிசம்பர், 2010

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு மாற்றியதை கண்டித்து வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா இராணுவத்தினர் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மன்னார், வவுனியா, மதவாச்சி பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்ற உறவினர்களையும் அனுமதிக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக