செவ்வாய், 18 ஜனவரி, 2011

படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!

மானிப்பாயில்  துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நவாலிப் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் மானிப்பாய் நவாலி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவ் வீட்டின் குடும்பத்தலைவி தெரிவிக்கையில்
,
குருக்களின் மனைவியும் குருக்களும் மானிப்பாய் புற்கைதின்னிப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேக பூசை தொடர்பாக கேற்றிற்கு வெளியே கதைத்துக்கொண்டிருந்த போது 3 வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதன்போது யாரோ பட்டாசு கொழுத்தியிருப்பதாக நாம் எண்ணி  தொடர்ந்தும் கதைத்துக்கொண்டிருந்தபோது 10 நிமிடத்திற்குப் பின்னர் ஐயரம்மா ஐயோ காலில் சுட்டிட்டாங்கள் எனக் கத்தினார் அதன் பின்னரே நானும் ஆட்டோச் சாரதியான எனது கணவர் பாலமுரளியும் மற்றும் சில அயலவர்களும் இணைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் மானிப்பாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குருக்களின் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இச் சம்பவம் தொடர்பில் நேற்று நண்பகல்வரை இராணுவத்தினர் எவரும் விசாரணைக்காக வரவில்லையென காயமடைந்தவரின் கணவனான சிவபாலசுந்தரம் ஐயர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக