தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து அதனை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறான கட்சிகளுடன் பேச்சு நடத்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏன் பேசவில்லை என்று புலம்பெயர் தளத்தில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் கூட்டமைப்பிற்கு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை சமாளிக்கும் நோக்கிலேயே மாவை சேனாதிராசா இவ்வாறான பொய்கதையினை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்.
உண்மையில் மாவை சேனாதிராசா இதுவரையில் எனக்கோ எனது கட்சியினருக்கோ ஒரு தொலைபேசி அழைப்பினைக் கூட மேற்கொள்ளவில்லை.
எமது கட்சியினருக்கு தேசியம் தொடர்பிலான தெளிவான பார்வையும், கொள்கைப் பற்றும் உள்ளன. சிறுமைத் தனமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளுக்கு எம்மையோ எமது கட்சியினையோ பயன்படுத்த வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என்றும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக