கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்ட 18 பெண்பிள்ளைகளில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் இருந்து கல்வி கற்று வருபவர்களாவர். தைப்பொங்கலுக்காக மெனிக்பாமில் உள்ள தமது பெற்றோரைப் பார்க்க வந்தபோதே பலவந்தமாக இந்தச் சிறுமிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண் பிள்ளைகளின் பெற்றோர் தம்மிடம் முறையிட்டுள்ளதாகச் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக