செவ்வாய், 18 ஜனவரி, 2011

மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு

கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்ட 18 பெண்பிள்ளைகளில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் இருந்து கல்வி கற்று வருபவர்களாவர். தைப்பொங்கலுக்காக மெனிக்பாமில் உள்ள தமது பெற்றோரைப் பார்க்க வந்தபோதே பலவந்தமாக இந்தச் சிறுமிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண் பிள்ளைகளின் பெற்றோர் தம்மிடம் முறையிட்டுள்ளதாகச் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக