இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 15 பிப்ரவரி, 2010
ஹெலிகாப்டர் மலையில் மோதி 10 பேர் மரணம்
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது. தற்போது அவர்களுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏமன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள வடக்கு மலைப்பகுதிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்களும் இருந்தனர்.
திடீரென இந்த ஹெலிகாப்டர் சானா நகர் பகுதியில் உள்ள கஹியன்மலையில் மோதி நொறுங்கியது. எனவே, இதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 10 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.
இந்த விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் இது கலவரக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக