திங்கள், 15 பிப்ரவரி, 2010

பாலஸ்தீன அதிபரின் சகா பதவியிலிருந்து நீக்கம்

பாலஸ்தீனிய அதிபர் மஹ்முத் அபாஸ், அவரது மூத்த சகாவான ரபீக் ஹுசைனியை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரபீக் ஹுசைனி பாலியல் உறவு குறித்து வெளிப்படுத்திய கருத்துப் பற்றி வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக இஸ்ரேல் செயற்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிப்பதற்கு பாலஸ்தீன அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளனர். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் வெளியான வீடியோ பதிவில் ரபீக் ஹுசைனி ஆடைகளைக் களைவது போலவும் பெண்ணொருவரை அழைப்பது போலவும் காட்சி வெளியாகியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக