திங்கள், 15 பிப்ரவரி, 2010

நேட்டோ படையினர் பெரும் தாக்குதல்

ஆப்கானிஸ்தா‌னி‌ன் தென் பகுதியில் தாலிபான்கள் பலமாக உள்ள மர்ஜா நகர் மீது நேட்டோ, அமெரிக்கப் படைகள் பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படை கமாண்டர் நிர் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களுடன் நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மர்ஜா நகருக்குள் முன்னேறிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பில் உயிரிழப்பும் இல்லை. நேட்டோ படையில் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டின் வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக