இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக வழக்கு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிக நிதியை அவுஸ்திரேலியாவில் சேகரித்து அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. நேற்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் எனப்படும் மேற்படி மூவரும் தாம் குற்றம் செய்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என ரேடியோ அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளபோதும், மேற்படி மூவரும் 2004 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் பணம் சேகரித்து அனுப்பி வந்தது குற்றச்செயல் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்களையில் தாம் அனுப்பியிருந்ததாகவும் விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளாராம். இவர்கள் மூவரும் தமிழ் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என இவர்களுக்கு எதிராக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் கூறியுள்ளாராம். இவ்விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக