செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிக நிதியை அவுஸ்திரேலியாவில் சேகரித்து அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. நேற்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் எனப்படும் மேற்படி மூவரும் தாம் குற்றம் செய்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என ரேடியோ அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளபோதும், மேற்படி மூவரும் 2004 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் பணம் சேகரித்து அனுப்பி வந்தது குற்றச்செயல் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகளுக்கு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்களையில் தாம் அனுப்பியிருந்ததாகவும் விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளாராம். இவர்கள் மூவரும் தமிழ் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என இவர்களுக்கு எதிராக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் கூறியுள்ளாராம். இவ்விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக