இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
கெப்பிற்றிக்கொலாவ கிளைமோர் தாக்குதல்
கெப்பிற்றிக்கொலாவையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவை சேர்ந்த இந்திரன் என்றழைக்கப்படும் மகாலிங்கம் முத்துலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் என்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் தான் இணைந்துகொண்டதாக அவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேருநுவரவை சேர்ந்த காவல்துறையின் விசேட குழுவினர் சந்தேக நபரை கைது செய்து தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரித்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி கெப்பிற்றிக்கொலாவையில் பயணிகள் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக