செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ?

எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ? நம்மினம் செய்த தவறு தமிழராய்ப் பிறந்ததா? சும்மா நிலத்தில் எரிகின்ற சருகுகளா நாங்கள்? அம்மா! என்று அலறிடினும் கேட்க ஆளில்லையோ? ஐயகோ! கொடுமையிலும் கொடுமை தாயகத்திலே தீயிலே பொசுங்குவதும் தீயினையே அணைப்பதும் கூக்குரலும் கொலைவெறிக் களமுமாக நம்தேசம்! எக்காளமிடும் சிங்களத்துக்கே துணைபோகும் உலகம்! ஏனிந்த அவலம்? எமக்கிந்தக் கொடு'ர வாழ்க்கை? வானைப் பிளக்கும் கொத்தணிக் குண்டுகளின் கோரம்! இனியும் பொறுமையில்லை இனஅழிப்பைப் பார்த்திட என்றே எழுந்தனர் வான்புலிவீரர் எம்மினக் காப்பாளர் தற்கொலைப் படைக்குள் தம்மையே நுழைத்து அற்புதச் செயலாய் வான்மீதிலே இறக்கை அடித்து பறந்தனர் மாவீரர் ரூபனும் சிரித்திரனும் சிரித்தவாறே சுற்றி வளைத்து இலக்கை எய்திட இரையாகினரோ! வதைபடும் நம்மின மீட்புக்காக வான்புலிகளாகி சிதைத்தனர் எதிரிகளின் கற்பனைக் கோட்டைகளை இதைவிட மிகப்பலம்! இன்னுமின்னும்! வருமென்பதை பதியமிட்டே சிங்களமனதில் பதித்தவருக்கு வீரவணக்கம்! வான்புலியாகி வானமதிற் கலந்திட்ட தியாகிகளே! உன்னினங் காக்க இன்னுயிரை நேரங்குறித்து ஈந்த அன்னைமண் மைந்தர்களே! தீயிலும் ஒளிரும் மணிகளே! இன்றிங்கே இறைஞ்சுகிறோம் மலரோடு சுடரேற்றியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக