இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 11 பிப்ரவரி, 2010
மரபணு மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
மரபணுக்களின் மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட பண்டையகால மனிதனின் தலை முடி மரபணுக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நேசர் என்ற விஞ்ஞான ஆய்வு சஞ்சிகையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வயது வந்த ஆண்களின் தலை மையிர் கருமையாக காணப்பட்டதாகவும், தலையில் வழுக்கை விழுந்திருந்ததாகவும், கபில நிற கண்கணை கொண்டிருந்ததாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குறித்த நபரின் மரபணு கிறீன்லாந்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அவரது பூர்வீகம் சைபீரியாவாக இருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குளிர்கால நிலைகளுக்கு ஏற்ற வகையில் குறித்த நபரின் உடற் கட்டமைப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக