வியாழன், 11 பிப்ரவரி, 2010

மரபணு மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மரபணுக்களின் மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட பண்டையகால மனிதனின் தலை முடி மரபணுக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நேசர் என்ற விஞ்ஞான ஆய்வு சஞ்சிகையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வயது வந்த ஆண்களின் தலை மையிர் கருமையாக காணப்பட்டதாகவும், தலையில் வழுக்கை விழுந்திருந்ததாகவும், கபில நிற கண்கணை கொண்டிருந்ததாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறித்த நபரின் மரபணு கிறீன்லாந்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அவரது பூர்வீகம் சைபீரியாவாக இருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குளிர்கால நிலைகளுக்கு ஏற்ற வகையில் குறித்த நபரின் உடற் கட்டமைப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக