இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 11 பிப்ரவரி, 2010
ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்கு பா.ஜ.க குரல்கொடுக்கின்றது.
சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்..
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கையில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பா.ஜ.க. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது பாதுகாப்பு மற்றும் நலத்தினை உறுதிசெய்வதுடன், கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க அதிபர் ராஜபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்கிறது.
அண்டை நாடான இலங்கையில் இதுபோன்று ஒரு ஜனநாயக அத்துமீறல் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ராஜபட்ச அரசு உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனவும் பா.ஜ.க. கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக