சனி, 13 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவை கைதுசெய்த அதிகாரி மரணப்பயத்தில் உள்ளார்

இராணுவத்தினரால் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை அவரது அலுவலகத்திலிருந்து பலவந்தமாக இழுத்துச் சென்ற இராணுவக் காவல்துறைப் பிரிவிற்கு கட்டளைப் பிறப்பித்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரண பயத்தில் காணப்படுவதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மானவடு தனது வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வருவதாகவும் அலுவலகத்தை விட்டு வெளியே வராது தமது அலுவலகத்திற்குள்ளே இருப்தாகவும், அதிகாரிகளின் உணவகத்திற்குக் கூட அவர் செல்வதில்லை எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள மானவடு, இராணுவத்தில் எந்தவொரு பணியில் பங்கேற்பத்தைத் தவிர்த்துவருவதுடன் இராணுவத்திலுள்ள படைச் சிப்பாய்களை எதிர்கொள்வதிலும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகப் பணியொன்றுக்காக இராணுவ அதிகாரியொருவர் மானவடுவைச் சந்திக்க வேண்டுமாயின் அந்த அதிகாரிகள் ஆயுதங்கள் இன்றியே வரவேண்டும் என மானவடுவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 40 இராணுவத்தினரைத் தனது பாதுகாப்புக்கு வைத்துள்ள மானவடு மேலதிக துருப்பினர் எவரும் தனது அலுவலகத்திற்கு வருவதைத் தடைசெய்துள்ளார். இராணுவத்திற்குள்ளிருந்து எவராயினும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தம்மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்ததை அடுத்து மானவடு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக