சனி, 13 பிப்ரவரி, 2010

தேசத்துரோகி கருணாவிற்கு சவால் விடுகின்றார் பொம்மை முதல்வர்

பொதுத்தேர்தலில் போட்டியிடத்தயங்குகிறார் கருணா என்று நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்துக் கூறியுள்ளார் பொம்மை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். 2010 ஜனாதிபதித் தேர்தலின் முன்பு தன்னை பொதுத்தேர்தலில் போட்டியிட வைக்காது கடந்த முறைபோல் இம்முறையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தருமாறு மகிந்தவிடம் கருணா மண்டியிட்டுக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பில் கருணாவை வைத்து பெரும் வெற்றி கண்டுவிடலாம் என கனவுகண்ட மகிந்த படு தோல்வியடைந்த நிலையில் இம்முறை கருணாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுப்பதில்லை என்று கூறியதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேசியத்தலைவரைத் தாம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறும் நிலையில் அவர்களின் கூட்டணிக்கட்சியகிய கெல உறுமய தற்போதுள்ள சூழலில் கருணாவின் ஆதரவு தேவையில்லை என்றும் இம்முறை அவருக்கு பாராளுமன்றத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்தமுறை கெல உறுமயவின் தேசியப்பட்டியல் மூலமே கருணா பாராளுமன்றத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தான் ஒரு பொம்மை முதல்வராக இருப்பதற்கு கருணா காரணம் என்று கருதும் பிள்ளையான் சென்ற தடவை போல் கருணா ஆளும் கட்சியிடம் மண்டியிட்டு பாராளுமன்றம் செல்லாமல் முடிந்தால் இம்முறை தேர்தலில் போட்டியிட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றால் தனது நிலை என்ன என்ற மனனிலையிலேயே கருணா தற்போது உள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக