சனி, 13 பிப்ரவரி, 2010

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

சிறீலங்காவின் ஆறாவது நிறைவேற்று சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் நீண்ட வன்முறைகளுடனும் சட்டவரம்பு மீறல்களுடனும் அதிகாரத்துஸ் பிரயோகத்தின் மத்தியிலும் நடந்து முடிந்துள்ளது தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக ஆறு மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன் அறுபதுக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டு பல லட்சம் ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலை நியாயமாக நோக்குமிடத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றதாகக் கருதமுடிகிறது. இருந்தும் தேர்தல் முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்தவே வெற்றிபெற்றுள்ளார்.எது எப்படியோ தமிழ் மக்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் இனத்திற்கே தனித்துவ மான ஒரு குண இயல்பான நாம் எவரையும் அடக்கியாளவும் இல்லை. எவரையும் அடக்கியாள விட்டதும் இல்லை. என்பதை தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இத்தேர்தலின் மூலம் எடுத்துக்கா ட்டியுள்ளனர். குறிப்பாக தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப்பகுதியில் இரண்டரை இலட் சத்திற்கு மேற்பட்ட படையினற்குள்ளும் எம்மினத் துரோகிகளான ஒட்டுக்குளுக்களின் இரும் புப் பிடிக்குள்ளும் இருக்கும் தமிழ் மக்கள் வீரத்தையும் விவேகத்தையும் வெளிக்காட்டி தமது தனித்துவத்தை நிலை நாட்டியுள்ளனர். அத்துடன் புதிதான தீர்மானமின்றி அற்ப சலுகை களுக்காக நேரடியாக ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்காக ஓட்டுக்கே ட்டு பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் காத்திரமான செய்தியைக் கூறியுள்ளனர்.பல்வேறு காரணங்களுக்காக உறங்கு நிலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் 2009ம் ஆண்டு இறுதிப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுக்கவேண்டிய முடிவுகள் தொடர்பில் கருத்துப்பரிமாற்றத்தை மேற் கொண்டபோது இரு பிரதான வேட்பாளர்களும் போர்குற்றவாளிகளாக இருப்பதனால் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கமுடியாது ஆனாலும் மகிந்தவை எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக்கூ டாது என்றும் இருப்பினும் தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதனால் எதிர்வரும் தைப்பொங்கல் நாள்வரை உங்கள்முடிவுகளை இடை நிறுத்தி வைத்துவிட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதனால் பெரும்பாலான தமிழ் மக்களினதும் புத்திஜீவிகளினதும் விருப்பத்துக்கு அமைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகக்கூறி அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யாது இரு பிரதான வேட்பாளர்களுக்குப் பின்னாலுள்ள கட்சிகளும் கடந்த அறுபது ஆண்டுகளிலும் தமிழ் மக்களுக்கு செய்த அனீதிகளையும் அழிவுகளையும் சொத்திழப்புக்களையும் விளக்கிப் பிரச்சாரம் செய்யுமாறு ஆலோசனை கூறியதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை உணர் ந்த தன் உயிரிலும் மேலாக தமிழ் மக்களை நேசிக்கும் அத்தளபதியின் ஆலோசனையை புறம் தள்ளிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என்றே கூற வேண்டும் இனியாவது தமிழ் மக்களின் இதயத்துடிப்பை அறிந்து இரண்டு லட்சத்திற்கு மேலான உயிர்விலையைக் கொடுத்து பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் இழந்து தமிழ் மக்களின் உறுதியை நிலை நிறுத்திய எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களின் தனித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுமா என்பதே தமிழ் மக்களிடம் தற்போதுள்ள கேள்வியாகும். இதைவிட தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசிற்கு தோள் கொடுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் இத்தேர்தலை தங்கள் பல்வேறுபட்ட சுய நலங்களிற்காக எதிர் பார்த்திருந்த சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை இத்தேர்தல் மூலம் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர் என்றே கூறவேண்டும். அத்துடன் போர் வெற்றி அகங்காரத்திலிருந்த சரத்பொன்சேகாவிற்கும் மகிந்தவிற்கும் கொடுத்த தீர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்ததாகவே கூறவேண்டும். அதேவேளை தமிழ் மக்கள் சரத்பொன்சேகாவிற்குக் கொடுத்த ஆதரவு எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்ற அடிப்படையிலேயே வழங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும். விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றி கொண்ட ஜாம்பவான் தானே எனக்கூறியவருக்கு ஆதரவளித்ததன் மூலம் விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றீர்களே கடந்த நான்கு வருட போரின் போதும் விடுதலைப் புலிகள் இவ்வளவு காலமும் சாதித்த சாதனைகள் எத்னையும் சாதிக்கவில்லையே நீதியின்பால் நில்லாது அனீதின்பால் நின்று சர்வதேசத்தின் சட்டதிட்டங்க்களுக்கு மதிப்பளிக்காது போரை வென்றதுபோல் நீதியின்பால் நீங்கள் இத்தேர்தலில் தோர்க்கடிக்கப்படவில்லை அனீதியின் பால் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று உணர்த்தியுள்ளனர்.இதைவிட இவ்விரு கொலைகாரர்களுக்கும் நீங்கள் இருவரும் எங்களின் மேல் எவ்வளவு அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் எவ்வளவு வார்த்தைஞாலம் கொட்டினாலும் தமிழர் நாம் தனித்துவமாகத் தன்மானத்துடன் வாழ்வதையே விரும்புகின்றோம் என்பதையும் நாங்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக நீங்கள் எங்கள் மீது ஏவிவிட்ட எட்டப்பர்களுக்கு தமிழ் மக்கள் இத்தேர்த்லின் மூலம் கூறிய செய்தி என்னவெனில் நாம் கடந்த அறுபது வருடங்க்களாக எமது தனித்துவமான வாழ்விற்காக எத்தனையோ உயிர் விலைகளயும் எவ்வளவோ சொத்திளப்புக்களையும் கொடுத்துள்ளோம் நீங்க்கள் விலை போனபோதும் நாங்கள் இவ்வளவு காலமும் விலைபோகாது உள்ளோம் இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகின்றோம் இனியாவது உங்கள் சுயனலத்திற்காக எமது பாதையில் தடைக்கல்லாக நிற்காமல் விலகி நிற்கும்படி கூறியுள்ளனர்.இதன் பின்னராவது இவ் எட்டப்பர்கள் தமிழ் மக்களின் இம்முடிவினை உணர்ந்து செயற்படுவார்களா அல்லது அடுத்துவரும் தேர்தலிலும் மூக்குடைபடப்போகிறார்களா. சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் கூறிய செய்தியென்ன கடந்த அறுபது ஆண்டுகளும் ஏதோ ஒரு வகை யில் நீங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் எமது இனப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளீர்கள் எத்தனையோ சந்தர்ப்பங்க்களில் உங்கள் சுயனலத்திற்காக ஆதரவாகவும் எதிராகவும் செயற்பட்டுள்ளீர்கள் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோது எமது உரிமையைப் பெற்றுத்தர காத்திரமான முடிவை எடுப்பீர்கள் என நம்பினோம்.நீங்கள் உங்கள் சுயனலத்திற்காக பயங்கரவாதமுத்திரை குத்தி எமது விடுதலைப் போராட்டத்தை அளித்ததுடன் இன்றுவரை பாராமுகத்துடனே உள்ளீர்கள்.இருந்தும் பெரும்பாலான நாடுகளின் எதிர்பார்ப்புக்கமைய இத்தேர்தலின் மூலம் எமது தேவைகளை வெளிப்படுத்தியுள்ளோம். எமது அபிலாசைகளைப் புரிந்து கொள்ளுமாறு சர்வதேசத்திற்கும் குறிப்பாக பிராந்தியவல்லரசுக்கும் எடுத்துக்காட்டியுள்ளதுடன் எமது அடிப்படையான உரிமைப்பிரச்சனையைத் தீர்க்காதவரை நீங்கள் பொருளாதார நலன் கருதி எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் விளலுக்கிறைத்த நீர் போலத்தான் ஆகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். எது எப்படியோ தமிழ் மக்கள் கடந்த அறுபதுவருடப் போரட்ட காலத்திலும் எமது தோல்விக்குப் புறக்காரணிகளாக அமைந் துவிட்ட பணமும் பலமும், அறிவும் ஆற்றலும்,ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஒன்று சேராதவரை யிலும் எமக்கு இவ்வாறான பின்னடைவுகள் ஏற்பட்டவ்ண்ணமே இருக்கும். அத்துடன் தமிழ் மக்களின் தோல்விக்கு இன்னுமொரு புற்க்காரணியாக அமைந்துவிட்ட உலக மயமாக்கலும் அதன் நலன்சார்பு நிலையும் பிராந்திய நாடுகளும் அதன் வல்லாதிக்கப்போட்டிகளையும் புரிந்துணராத வரையிலும் உலக நாடுகளின் ஒற்றுமையை உணராதவரையிலும் தமிழ் மக்களின் நினைவு பகல் கனவு தான் என்பதுதான் உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக