சனி, 13 பிப்ரவரி, 2010

vஅரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில்..

ஆளும்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள சுமார் 25க்கு மேற்பட்டவர்கள் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாணத்தில் நீதித்துறை, சட்டத்துறை, மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவார்கள். வேட்பாளர் தெரிவிற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஈழமக்கள் சனநாயக கட்சி ஈபிடிபி தனித்து வீணைசின்னத்தில் போட்டியிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ள நிலையில், அரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் வன்னியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது முடிவான நிலையில் தமிழ் புத்திஜீவிகளைக் கொண்ட சுயேற்சை குழுவினர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளனர். அரசியல் கட்சிகளில் புதுமுகங்கள் பல தோன்றவுள்ளனர். 83க்கு முன்னர் இருந்த நிலைபோன்று தாம் விரும்பும் அரசியல்கட்சியில் ஈடுபட பலருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது. நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். வன்னி தேர்தல் தொகுதி என்பது வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடகியது. வன்னியில் கல்விமான்கள் விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிடவர்களே சுயேற்சையாக போட்டியிட முன்வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக