ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கனடாவில் சிங்களவர்கள் ஆர்பாட்டம்

ராணுவப் போலீசால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்துவரும் நிலையில் கனடா ஒட்டாவாவிலும் ஆர்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரினது கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில், சரத் பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக