ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அதே அதிகாரத்தின் மூலம் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும்

அரந்தலாவயில் பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்கியது போல தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர். அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராமாஞ்ய ஆகிய பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கதேரர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக் கையை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத் திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள். பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரை களை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்ப தற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட வர்களை அரசாங்கத்துடன் இணைத்து கொண்டு, பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேகா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக