இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
வீடுகள் சிங்கள ஒப்பந்தகாரர்களால் உடைப்பு
கிளி நொச்சி மாவட்டம், ஸ்கந்தபுரம், அக்கராயன் பகுதிகளில் பொது மக்களின் வீடுகளை உடைத்து அந்த ஓடுகள், கற்கள், மரங்களையே புதிய ஒப்பந்த கட்டிடங்களுக்கு பாவித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் உள்ள ஒப்பந்த வேலைகளை சிங்களவர்கள், சிங்கள ப்படைகளின் உறவினர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக பொருட்களை கொண்டுவராது அங்கு இருக்கின்ற பொது மக்களின் வீடுகளை உடைத்தே கட்டட வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஸ்கந்த புரம் பகுதியில் கிராம சேவகர் மகேந்திரனின் வீடு, மருத்துவர் கோபால பிள்ளையின் வீடு ஆகியனவும் உடைக்கப்பட்ட வீடுகளில் அடங்கும்.
அரச அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் வீடுகளுக்கு என்ன நிலை?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக