சனி, 13 பிப்ரவரி, 2010

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடலாம்

இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் மற்றும் சட்டத்தரணியும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படை மீறல் மனுவை விசாரித்த நீதியரசர்கள் அடங்கிய குழு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி உட்பட சில மேலதிக உரிமைகளை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் அசோக என். டி.சில்வா மற்றும் நீதியரசர்கள் சிரானி திலகவர்த்தன, சுந்தர எக்க நாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் குழு தடுத்து வைக்கப் பட்டுள்ள பொன்சேகாவுக்கு மேலதிகமான சில உரிமைகளை வழங்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கமைய பொன்சோவின் சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் தடுத்து வைக் கப்பட்டுள்ள பொன்சேகாவை அடிக்கடி சென்று பார்வையிடுவதற்கும் அனுமதியை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தற்போது பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத் திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு அரச தரப்புச் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். எனினும் இக்கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அரச தரப்பினால்,கைது செய்யப்பட்டவரின் மனைவி மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவரின் சட்டத்தரணியே மனுவைத் தாக்கல் செய்யலாம். அத்துடன் அச் சட்டத்தரணி சத்தியப்பிரமாண ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்காததால் அவரும் தாக்கல் செய்ய முடியாது என்பதுடன் அது சட்டத்திற்கு முரணானது என்றும் அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜய் இராஜரட்ணம் வாதிட்டார். எனினும் இதனை நீதியரசர்கள் குழு நிராகரித்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொன்சேகா போட்டியிட விரும்பினால் வேட்புமனுவில் கையயாப்பம் இடவும் ஏனைய ஆவணங்களைத் தயாரிக்கவும் இடமளிக்குமாறு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து கருத்து வெளியிட்ட பொன்சேகாவின் சட்டத்தரணி சிரான் திலக, நீதியரசர்களின் இவ் உத்தரவு பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் நிறுத்தி விசாரணை செய்வதைத் தடுக்கும் என்றும் இது பொன்சேகாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக