இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம்!
வரும் 18 ம் திகதி, மதுரையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான்.இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் நாம் சமூக இயக்கமாக செயற்பட்டு வந்த 'நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18-ந் தேதி நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது.
உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும்.சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில் `பாயும் புலி'யும், அதை சுற்றி கரு வட்டமும், அதில் இருந்து சூரியக் கதிர்கள் வெளிவருவது போலவும் அமைந்துள்ளது.முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக