சனி, 13 பிப்ரவரி, 2010

சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம்!

வரும் 18 ம் திகதி, மதுரையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான்.இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் நாம் சமூக இயக்கமாக செயற்பட்டு வந்த 'நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18-ந் தேதி நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும்.சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில் `பாயும் புலி'யும், அதை சுற்றி கரு வட்டமும், அதில் இருந்து சூரியக் கதிர்கள் வெளிவருவது போலவும் அமைந்துள்ளது.முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக