இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
பாரிய நில நடுக்கம்.....
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் டோங்கா எனும் தீவு நாடு உள்ளது. இந்த நாடு 169 சிறிய, சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. 500 மைல் சுற்றளவுக்குள் இந்த தீவு கூட்டங்கள் உள்ளன.
இன்று காலை டோங்கா தீவின் தலை நகரில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் 60 மைல் தொலைவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இந்த நில நடுக்கம் பூமியில் அதிக ஆழம் இல்லாமல் உருவாகி இருந்தது. இதனால் டோங்காவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.
டோங்கா தீவு கூட்டங்கள், அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் அபாயப் பகுதியில் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு 8 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட மிகப்பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக