இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண் மூடித் தனமாக துப்பாக்கிப் பிரயோகம்
அமெரிக்க அல்பமா பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகமென்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு வெளியே இருந்து, உயிரியல் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரியல் பிரிவுத் தலைவர் மற்றும் இரண்டு பேராசிரியர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட பெண் பல்கலைக்கழக பேராசிரியர் பீட உறுப்பினர் எனவும், குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக