சனி, 13 பிப்ரவரி, 2010

இறப்பு 2,30,000 ஆக அதிகரிப்பு

ஹெய்ட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகி விட்டது. இன்னமும் அங்கு முழுமையாக மீட்பு பணிகள் நடந்து முடிக்கப்படவில்லை. இடிந்த கட்டிடங்களுக்குள் இப்போதும் உடல்கள் அழுகி துர்நாற்றம் அடித்தபடி உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இது வரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக ஹெய்ட்டி மந்திரி லாரன்ஸ் ஜெஸ்லின் கூறியுள்ளார். 3 லட்சம் பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்கப்படும் உடல்களை அடக்கம் செய்ய எவரும் முன் வராததால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே ஒன்றுசேர்ந்து பொது இடங்களில் அவற்றைப் புதைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக