இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
இறப்பு 2,30,000 ஆக அதிகரிப்பு
ஹெய்ட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகி விட்டது. இன்னமும் அங்கு முழுமையாக மீட்பு பணிகள் நடந்து முடிக்கப்படவில்லை. இடிந்த கட்டிடங்களுக்குள் இப்போதும் உடல்கள் அழுகி துர்நாற்றம் அடித்தபடி உள்ளன.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இது வரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக ஹெய்ட்டி மந்திரி லாரன்ஸ் ஜெஸ்லின் கூறியுள்ளார். 3 லட்சம் பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்படும் உடல்களை அடக்கம் செய்ய எவரும் முன் வராததால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே ஒன்றுசேர்ந்து பொது இடங்களில் அவற்றைப் புதைக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக