இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
கருணா அரச விடுதியில்! பொன்சேகா சிறையிலா? - தென்பகுதியில் களைகட்டும் ஆர்ப்பாட்டம்
ஜெனரல் சரத் பொன்சேகா சட்ட ரீதியற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் நீதிமன்றத் தெருக்களில் சட்டத்தரணிகள் நேற்று ஒரு ஆர்ப்பாட்ட ஊர் வலத்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை யஹாரணவிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பல்வேறு சுலோகங்களுடன் கூடிய அட்டைகளைத் தாங்கிய வண்ணம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னர் தேசிய வீரர் இப்போது துரோகியா? கருணா அரச விடுதியில் ஜெனரலோ சிறை யில், ஜெனரலே நாங்கள் உங்களோடுதான் போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர் கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அமைப் புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐக்கிய தேசியக் கட் சியின் யஹாரண அமைப்பாளர் ரவி ஜெய வர்த்தன , பேராசிரியர் விமல் குணவர்த்தன , பி.டி.அபேவர்த்தன ஆகியோர் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜெனரல் பொன்சேகாவை கைது செய்தவர்களுக்கு இடி விழட்டும் எனக் கூறி பொதுமக்கள் தேங் காய்களை உடைத்துள்ளனர்.இதேவேளை அநுராதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை இனந்தெரியாதவர்கள் தாக்கிக் கலைக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக