இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 11 பிப்ரவரி, 2010
திறந்த வெளியில் தகனம் : பிரிட்டனில் இந்து நபருக்கு சட்டப்படி உரிமை
பிரிட்டனில் வசிக்கும், இந்து சமய நபர் ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையைச் சட்டப்படி வென்றுள்ளார்.
பிரிட்டனின் சட்ட விதிமுறைகளின் படி உடலங்களை எரியூட்டும் கூடங்களில் மட்டுமே தகனம் செய்ய முடியும். எனவே 71 வயதான தேவாந்தர் காய் என்பவர், தான் இறந்த பிறகு தனது உடல் திறந்த வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவரது உள்ளூராட்சி அதிகார சபை மறுத்துவிட்டது.
எனினும் தனது முயற்சியை தேவாந்தர் காய் கைவிடவில்லை. தொடர்ந்து வாதிட்டார்.
ஒரு நல்ல மரணத்துக்கும், இறந்த பிறகு தனது ஆன்மா உடலில் இருந்து விடுபட்டுச் செல்லவும் திறந்த வெளி தகனம் மிகவும் அவசியம் என்று அவர் வாதிட்டார். வழக்கிலும் வென்று அதற்கான உரிமையை வென்றுள்ளார்.
இது தொடர்பான சட்டத்தில் தெளிவைப் பெறவே தான் வழக்கை தொடுத்தாக அவர் கூறினார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக