இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 18 பிப்ரவரி, 2010
விடுதலைப்புலிகளை பொன்சேகா ஊக்குவித்தார்
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது:
சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன.
விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது.
இதன் பிறகு பொன்சேகா விடுதலைப்புலி ஆதரவு இயக்கங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டார். இது விடுதலைப்புலிகளை மீண்டும் தலை தூக்க உதவும் வகையில் இருந்தது. அதிபர் ராஜபக்சே கடுமையாக போராடி தீவிரவாதத்தை ஒழித்து இருக்கிறார். ஆனால் பொன்சேகா அறிக்கைகள் தீவிரவாதத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கிறது.
பொன்சேகாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால்தான் என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக