சனி, 1 மே, 2010

மே 16,17,18 காலப்பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்-ராணுவ அதிகாரி தகவல்

மே 16,17,18 காலப்பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்-ராணுவ அதிகாரி தகவல் கடந்த வருடம் மே 17ஆம் திகதி புலிகளை தாம் முற்றுமுழுதாக அழித்திருந்தோம். வன்னியில் இருந்து இறுதி யுத்தத்தின் போது தப்பித்து சென்ற சிலர் கொண்ட புலிகளின் அணியினர் அவர்களின் தலைமை அழிக்கப்பட்ட அந்த காலப்பகுதியில் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவத்தளபதி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். இந்த விடையம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன் பல பிரச்சனைகளையும் தமிழர்களின் வருங்காள போராட்டத்திற்கும் தமிழர்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதமாகவே இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். 1.விடுதலைப் புலிகளை தமிழர்களிடத்திலிருந்து பிரிப்பது. அது எவ்வாறாயின்.. சிங்கள ராணுவத்தினரால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சில முன்னால் போராளிகளை வைத்து பல கொளை கொள்ளை சம்பவங்களை நடத்த வைது அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போல் பிடித்து இவர்கள் புலிகள் தான்,இவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக பரப்புரைகள் செய்யலாம் இதன் மூலம் தமிழர்களிடத்திலிருந்து புலிகளை பிரிக்க முயற்சி செய்வதோடு உலக நாடுகளுக்கும் புலிகளின் நற்பெயரை கலங்கப்படுத்தவும் முயலலாம். 2.மே 16,17,18களில் நடத்தப்படலாம் என கருதப்படும் தாக்குதல்களும் அதன் விளைவுகளும். புலிகளின் பெயரால் மே மாதம் நடுப்பகுதியில் சிங்களப்பகுதிகளை மையமாகக்கொண்டு பல தாக்குதல்களை நடத்தி குறிப்பாக பேருந்து,புகையிரதம்,ஆட்டோ போன்ற வாகனங்களில் குண்டுகளை வைத்து வெடிக்க வைத்து அதில் பலரை கொலை செய்வதுடன் அந்த பளியை புலிகள் மீது போடுவதுடன் தற்போது ஜரோப்பா உட்பட பல நாடுகள் புலிகள் மீது அவர்களால் போடப்பட்ட தடையை நீக்க ஆராய்வதால் அதை தடுக்கும் விதமாகவும் இது இருக்கும்,புலிகள் தீவிர வாதிகள் தான் எனவே அவர்கள் மீது போடப்பட்ட தடையை நீடிக்க வேண்டாம் என்று உலக அளவில் பிரச்சாரம் பண்ண மகிந்த அரசு முயலலாம். அதிலும் முக்கியமாக இந்த தாக்குதலின் மூலம் தமிழ், முஷ்லீம் மக்களை பிரித்து அவர்களிற்கிடையில் இன மோதலை உண்டுபண்ணுவதும் இவர்களின் திட்டமாக இருக்கக்கூடும். இந்த தாக்குதல்களை துரோக கும்பல்களை வைத்து முஷ்லீம் பகுதிகளிலும் நடத்தி அதில் பல முஷ்லீம்களும் கொல்லப்படுவதுடன் அவர்களின் கடைகளும் குண்டுகள் வைத்து தகர்க்கப்படுவதோடு முஷ்லீம் மக்களை பளிதீர்க்க புலிகள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று கதை கட்டி விட்டு கிழக்கில் ஒரு தமிழ்,முஷ்லீம் இன மோதலை உருவாக்கி கறுப்பு யூலை போன்ற ஒரு சம்பவத்தை அரங்கேற்ற அரசு திட்டங்கள் தீட்டிவருவதாகவே அந்த ராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். 3.சரத்தின் ஆதரவு ராணுவத்தினர் மீது தாக்குதல். சரத் பொன்சேகா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ராணுவத்தினரை பேருந்துகளில் ஏற்றி வேறு படைத்தளத்திற்கு மாற்றுவதாக கூறி ஏற்றிச்சென்று இடையில் அவர்களின் பேருந்தின் மீது தாக்குதலை நடத்தி அதில் இருக்கும் அனைவரையும் தீர்த்துக்கட்டுவார்கள். 4.அவசரகாலச்சட்டத்தை பல ஆண்டுகள் மீண்டும் நீடிக்கும் திட்டம். எஞ்சியுள்ள புலிகளில் ஆபத்து உள்ளது இதனால் அவசர காலச்சட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதோடு வீதிச்சோதனைச்சாவடிகளும் அகற்றப்பட மாட்டாது என்று அரசு தெரிவிக்கலாம். குறிப்பாக கிழக்கின் ஆயுததாரி பிள்ளையான் குழுவினர் இந்த வாரம் இந்தியாவுக்கு செல்ல உள்ள விடையம் மற்றும் யாழில் புலிகளின் பெயரில் விடப்பட்டு துண்டுப்பிரசுரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் என்றே கருத முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக