தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு விசேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை அழித்தொழிக்கும் நோக்கில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியை தழுவிய போதிலும், புலம்பெயர் தமிழர்க் ஈழ இராச்சிய கனவை மெய்ப்பிக்க முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகளை பூரணமாக தடுத்து நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சும், புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட நாடுகளின் தூதுவராலயங்களில் இராணுவ அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனையிறவில் படைவீரர் நினைவுத் தூபி அங்குரார்ப்பண வைபவத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக