யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கையின் நிதி நிறுவனங்களை திறப்பதற்கு, சிவில் அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றன. யாழ்ப்பாண மக்களின் நிதி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இலக்குடன் தென்னிலங்கை நிதி முதலீட்டு நிறுவனங்கள் அங்கு திறக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு அனுமதிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் போலியான தொழில்வாய்ப்புகளை முன்வைத்து
பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அத்துடன் இலங்கை அரசாங்கம் உண்மையில் யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சிக்காக செயற்படவில்லை எனவும், யாழ்ப்பாணத்தின் நிதி நிலைமைகளை இல்லாது செய்வதற்காகவுமே செயற்படுவதாகவும் அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக