இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 14 மே, 2010
மரணங்களின் மத்தியில் ..............
மனமுள்ள தமிழன் நான் !
மண்டியிட்டு பிழைக்கிறேன்..
மானம் கேட்டு கதைக்கிறேன்..
கொத்துக் கொத்தாய்
மரணங்கள் மலிந்துகிடக்கின்றன.
பச்சிளம் பள்ளியில்
கற்பழித்து கதறுகிறாள்.
வெள்ளையாம்,கறுப்பாம்,கடத்தலாம்,
தமிழ் என்பதால் இவை அனைத்தும்.
பரிசு கெட்ட தமிழா நீ!
படுத்த படுக்கையில் மீண்டும்
புரண்டு படுக்கிறாய்.
அரை விழி காண்களோடு.
நண்றாக தூங்கிக்கொள்!
பாய்தின்னும் கறையான்
உன்னை தின்ன எவ்வளவு நாளாகும்?
அப்போதும் தூங்குவாயா?
தூங்கிக்கொள் இப்போது
மரணங்களின் மத்தியில்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக