இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 14 மே, 2010
புலியின் பெயர் கொண்டவன் வா... உன் விடுதலை உன்னால் தான் தீர்மானிக்க முடியும். நீ அடிமையாவதை நீ தான் தவிர்க்க வேண்டும். களத்திற்குள் நீ வந்தாலொழிய வரலாறு மாறாது. வெறும் கனவுகள் விடுதலையை வானிலிருந்து பொழியாது. உறங்கும் போது வரும் கனவு ஒன்றுக்கும் உதவாது. மறவனாய், மாற்றமாய் மண்ணை விரும்பும் தோழனாய். அடக்குமுறையை அடக்கும் தோளினாய். நீ இருப்பாய்... உயிர் கொடைக்கும் அஞ்சாதே. உயிர் கொடுக்க அஞ்சாதே. உதிரம் விடுதலைக்கு உயிர் வார்க்கும். உறவுகளின் செழிப்புக்கு உன் உறக்கத்தை பலியாக்கு. விடுதலையின் வேர் குருதியில் தான் முளைக்கிறது. வரலாறு உன் பெயரை வாசிக்கும். வருங்காலம் உன் செயலை நேசிக்கும். நீ... காற்றின் திசை திருப்பும் புலியின் பெயர் கொண்டவன். மானத்தைக் காக்கும் தலைவனின் வழி வந்தவன். மஞ்சள் நதியை அடக்கி ஆண்ட மாவோவின் புரட்சி சீனத்தின் துயர் தீர்த்தது. பகைவனின் பகை முறிக்க படை திரட்டு. பாடையில் அவன் திமிரடக்க நடைப்பழகு. தலைவனின் பணி சிறக்க பணியாற்று. மலரும் தமிழீழத்திற்கு சுடர் ஏற்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக